2024-02-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு) |
முற்றிலும் செவிபுலனற்றவர்களுக்கு இலகுரக வாகன சாரதி உரிமப் பத்திரங்களை வழங்குதல் - முற்றிலும் செவிபுலனற்றவர்களுக்கு இலகுரக வாகன சாரதி உரிமப் பத்திரங்களை வழங்கும் பொருட்டு முன்னோடி கருத்திட்டமொன்று கம்பஹா மாவட்டத்தை மையப்படுத்தி நடைமுறைப்படுத்துவதற்கு 2022‑12‑14 ஆம் திகதியன்று அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது. அதற்கிணங்க, இந்த முன்னோடி கருத்திட்டத்தின் பெறுபேறு மற்றும் இந்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குரியதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளரின் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள குழுவின் சிபாரிசுகளை அடிப்படையாகக் கொண்டு முழு நாட்டையும் தழுவும் விதத்தில் முற்றிலும் செவிபுலனற்றவர்களுக்கு இலகுரக வாகன சாரதி உரிமப் பத்திரங்களை வருடத்திற்கு இரண்டு தடவை புதுப்பிக்கும் அடிப்படையில் வழங்கும் பொருட்டு தேவையான நடவடிக்கையினை எடுப்பதற்காக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |