• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-02-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
மார்ச் மாதம் 21 ஆம் திகதியை தேசிய கடலோடிகள் தினமாக பிரகடனப்படுத்துதல்
- இலங்கையின் உள்நாட்டு பொருளாதாரத்திற்கு கடலோடிகளினால் வழங்கப்படும் பங்களிப்பினை மெச்சும் பொருட்டு தேசிய கடலோடிகள் தினமொன்றை பிரகடனப்படுத்துவது பொருத்தமானதென இனங்காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க கடலோடிகளாக தொழில் புரிவதற்கு ஆர்வமுள்ளவர்களை ஈர்ப்பதன் மூலம் அந்நிய செலாவணியை ஈட்டுவதற்கான வாய்ப்பினை உருவாக்குதல் மற்றும் சமுத்திர துறைசார்ந்த தேவைகளை விருத்தி செய்தல் என்பன ஊடாக தேசிய பொருளாதாரத்திற்கு வழங்கும் பங்களிப்பினை அதிகரிப்பதற்கான சாத்தியம் கிடைக்கப்பெறும். அதற்கிணங்க, ஒவ்வொரு ஆண்டிலும் மார்ச் மாதம் 21 ஆம் திகதியை தேசிய கடலோடிகள் தினமாக பிரகடனப்படுத்தும் பொருட்டு துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.