• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-02-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
தேசிய அனர்த்த முகாமைத்துவ திட்டம் - 2023 ‑ 2030
- 2005 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க இலங்கை அனர்த்த முகாமைத்துவ சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் தேசிய அனர்த்த முகாமைத்துவ திட்டத்தை தயாரித்தல் மற்றும் நடைமுறைப்படுத்துதல் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் முக்கிய பொறுப்பாகும். 2023 - 2030 செந்தாய் செயற்பாட்டு கட்டமைப்பு, நிலைபேறுடைய அபிவிருத்தி குறியிலக்கு மற்றும் காலநிலை மாற்றம் பற்றிய சமவாயம் என்பவற்றுக்கு அமைவாகவும் உரிய சகல விடயம்சார் நிறுவனங்களுடனான கூட்டிணைப்புடனும் 2023 - 2030 தேசிய அனர்த்த முகாமைத்துவ திட்டமானது தயாரிக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, தேசிய அனர்த்த முகாமைத்துவ திட்டம் - 2023 - 2030 ஐ பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பொருட்டு பாதுகாப்பு அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.