2024-01-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு) |
அரசாங்க நிறுவனங்களுக்கு இடையில் எழும் பிணக்குகளை தீர்ப்பதற்கு சட்ட ஏற்பாடுகளை அறிமுகப்படுத்துதல் - அரசாங்க நிறுவனங்களுக்கு இடையில் எழும் பிணக்குகளை துரிதமாக தீர்ப்பதற்கு இயலுமாகும் வகையில் பொருத்தமான சட்ட ஏற்பாடுகளை அறிமுகப்படுத்தும் தேவை இனங்காணப்பட்டுள்ளது. அதற்கிணங்க, சட்டமா அதிபருடன் உசாவுதலைச் செய்து சட்டமூலமொன்றைத் தயாரிக்குமாறு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |