• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-01-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
2023/2024 பெரும் போகத்தில் நெல் கொள்வனவு நிகழ்ச்சித்திட்டம்
- 2023/2024 பெரும் போகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்காக சலுகை வட்டி வீதத்தின் கீழ் அரசாங்க மற்றும் தனியார் வங்கிகளின் ஊடாக பிணைக் கடன் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கிணங்க, கடந்த ஐந்து (05) வருடங்களில் பெரும்போகத்தின் போது ஒவ்வொரு மாவட்டத்திலும் சராசரி உற்பத்தியினை அடிப்படையாகக் கொண்டு கடன் தொகையானது ஒதுக்கப்படும். உத்தேச கடன் திட்டத்தின் கீழ் 09 பில்லியன் ரூபா பிணைக் கடனாக வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நெல் ஆலை உரிமையாளர்களுக்கு ஆகக் கூடுதலாக 50 மில்லியன் ரூபா மற்றும் நெல் களு்சியசாலை உரிமையாளர்களுக்கும் நெல் தொகைகளை திரட்டுபவர்களுக்கும் ஆகக்கூடுதலாக 25 மில்லியன் ரூபா என்ற அடிப்படையில் கடன் தொகை வழங்கப்படும். கடனை மீள செலுத்தும் காலப்பகுதி 180 நாட்களாகும். 15 சத வீதம் கொண்ட வருடாந்த வட்டி வீதத்தில் 4 சதவீதமானது பொதுத் திறைசேரியினால் ஏற்கப்படும். அதற்கிணங்க, நெல் கொள்வனவு நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.