• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-01-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
தேசிய கடன் உத்தரவாத நிறுவனத்தின் செயற்பாட்டு பணிகளை ஆரம்பித்தல்
- சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சியாளர்களுக்கு நிவாரணம் அளிக்கும் நோக்கில் தேசிய கடன் உத்தரவாத நிறுவனத்தை தாபிக்கும் பொருட்டு 2021‑04‑27 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த நிறுவனம் பொது வரையறுக்கப்பட்ட கம்பனியொன்றாக பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, அதன் ஆரம்ப மூலதனமாக 50 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து பெற்றுக் கொள்வதற்குத் தேவையான நடவடிக்கையினை எடுத்து வருகின்றது. அதற்கிணங்க, தேசிய கடன் உத்தரவாத நிறுவனத்தின் செயற்பாட்டு பணிகளை ஆரம்பிக்கும் பொருட்டு நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.