• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-01-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
மன்னார் தீவில் காற்று மின்வலு கருத்திட்ட அபிவிருத்தி
- மன்னார் தீவில் காற்று மின்வலு நிலையமொன்றை நடைமுறைப்படுத்தும் பொருட்டு ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியின் கீழ் 47 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் செலவு செய்து ஆறு (06) மேலதிக டேர்பைன்களை பொருத்துவதன் மூலம் மின்சார உற்பத்தியை அதிகரிப்பதற்கான கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு 2020‑10‑26 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆயினும், அரசாங்க வௌிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தும் வரை ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியினை பயன்படுத்துவதற்கான சாத்தியம் இல்லை. ஆதலால், இருபது (20) வருட செயற்பாட்டுக் காலத்துடன் நிர்மாணித்து செயல்படுத்தி சொந்தமாக்கல் (BOO) என்பதன் கீழ் போட்டிகாரமான அடிப்படையில் தெரிவு செய்யப்படும் தனியார் துறை முதலீட்டாளர்களின் ஊடாக குறித்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.