2024-01-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு) |
மட்டுப்படுத்தப்பட்ட நிலைமைகளின் கீழ் கருங்கல் ஏற்றுமதி செய்தல் - நாட்டில் தற்போது நிர்மாணிப்பு மற்றும் அபிவிருத்தி பணிகளுக்குத் தேவையான கருங்கல் கேள்வியானது ஒப்பீட்டு ரீதியில் குறைந்த மட்டத்தில் நிலவுகின்றதன் காரணமாக கருங்கல் அகழ்வு தொழிலில் ஈடுபட்டுள்ள அகழ்வாளர்களும் அதனோடு தொடர்புபட்ட மக்களினதும் வாழ்வாதாரத்திற்கு இது கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலைமையினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு மட்டுப்படுத்தப்பட்ட நிலைமைகளின் கீழ் கருங்கல் ஏற்றுமதியின் மூலம் இலங்கைக்கு அந்நியச் செலாவணியை ஈட்டும் வேலைத்திட்டமொன்று குறுகிய காலப்பகுதியில் நடைமுறைப்படுத்தும் பொருத்தபாடு இனங்காணப்பட்டுள்ளது. அம்பாந்தோட்டை மாகம்புற துறைமுக நிர்மாணிப்பின் போது அப்புறப்படுத்தப்பட்ட கருங்கல் தொகையானது தற்போது இந்த துறைமுக வளாகத்தின் நிர்வாக கட்டடத்திற்கு அருகாமையிலும் அம்பாந்தோட்டை புதிய வைத்தியசாலை வளாகத்திலும் குவிக்கப்பட்டு'ள்ளதோடு, இந்த கருங்கல் தொகையினை துரிதமாக அப்புறப்படுத்த வேண்டியுள்ளது. சுற்றாடல் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்பினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு புவியியல் அளவை, சுரங்கங்கள் பணியகத்தின் மேற்பார்வையின் கீழ் இந்த கருங்கல் தொகையினை துரிதமாக ஏற்றுமதி செய்வதற்கு தேவையான நடவடிக்கையினை எடுக்கும் பொருட்டு அங்கீகாரம் வழங்குவதற்கும் கருங்கல் ஒரு மில்லியன் மெற்றிக்தொன் வரை ஏற்றுமதி செய்யும் சாத்தியம் மற்றும் பொருத்தப்பாடு தொடர்பிலான விடயங்களை ஆராய்ந்து சிபாரிசுகளுடனான அறிக்கையினை சமர்ப்பிக்கும் பொருட்டு குழுவொன்றை நியமிப்பதற்கும் அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டது. |