2024-01-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு) |
தண்டனை சட்டக்கோவைக்கான திருத்தம் - தண்டனை சட்டக்கோவையில் குறிப்பிடப்பட்டுள்ள கற்பழிப்பு தொடர்பிலான சட்டங்களைத் திருத்துவதற்கும் கற்பழிப்பு சம்பந்தமாக சட்டத்திலுள்ள குறைபாடுகளை சீர்செய்வதற்கும், ஆண் பிள்ளைகள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதை குற்ற நடவடிக்கையொன்றாக குறிப்பிடுவதற்கும் தண்டனை சட்டக்கோவைக்கு திருத்தங்களை அறிமுகப்படுத்தும் பொருட்டு 2021‑01‑18 ஆம் 2021‑06‑28 ஆம் திகதிகளில் நடாத்தப்பட்ட அமைச்சரவை கூட்டங்களில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. அதற்கிணங்க, சட்டவரைநரினால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் உடன்பாடும் கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் இந்த சட்டமூலத்தை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சம்ர்ப்பிப்ப தற்குமாக நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |