• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-01-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவைக்கான திருத்தம்
- சட்ட ரீதியிலான தாமதங்கள் காரணமாக பெரும்பாலும் குற்றவாளிகளுக்கு அல்லது மேன்முறையீட்டாளர்களுக்கு அவர்களுடைய தண்டனை காலத்திற்கு அதிகமாக நீண்டகாலம் சிறையில் இருப்பதற்கு நிகழ்ந்துள்ளமை நியாயமற்றதென இனங்காணப்பட்டுள்ளது. ஆதலால், குற்றவாளிகள் / மேன்முறையீட்டாளர்கள் சிறைப்படுத்தப்பட்டிருந்த காலம் அவர்களுடைய தண்டனை கட்டளையின் கீழ் சிறையில் அடைக்கப்படவேண்டிய காலத்திலிருந்து குறைப்பது தொடர்பில் பரிசீலனை செய்வதற்கு இயலுமாகும் வகையில் குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவையின் 323(5) ஆம் 333(5) ஆம் பிரிவுகளைத் திருத்துவதற்கு 2023‑02‑20 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. அதற்கிணங்க, சட்டவரைநரினால் சட்டமூலமொன்று தயாரிக்கப்பட்டுள்ளதோடு, அதன் பொருட்டு சட்டமா அதிபரின் உடன்பாடும் கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் இந்த சட்டமூலத்தை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சம்ர்ப்பிப்பதற்குமாக நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.