• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-01-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
அரசாங்க ஊழியர்களுக்கு செலுத்தப்படும் வாழ்க்கைச் செலவுப் படியினை அதிகரித்தல்
- 2024 ஆம் ஆண்டின் வரவுசெலவுத்திட்ட பிரேரிப்பின் மூலம் அரசாங்க ஊழியர்களுக்கு வாழ்க்கைச் செலவுப் படியினை 2024 சனவரி மாதம் தொடக்கம் 10,000 ரூபாவினால் அதிகரிப்பதற்கும், குறித்த படியினை 2024 ஏப்ரல் மாதம் தொடக்கம் வழங்குவதற்கும் அரசாங்கம் திட்டமிட்டிருந்தது. நிலவும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக குறித்த இந்தப் படியிலிருந்து ஒரு பகுதியையேனும் ஆண்டின் ஆரம்ப மாதங்கள் சார்பில் பெற்றுத்தருமாறு பல்வேறு தரப்பினர்களிடமிருந்து கோரிக்கைகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதற்கிணங்க நாட்டில் நிலவும் பொருளாதார நிலைமையினால் ஏற்பட்டுள்ள அழுத்தத்தினை கருத்திற்கொண்டு சகல அரசாங்க ஊழியர்களுக்கும் 2024 சனவரி மாதம் தொடக்கம் அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவுப் படியில் 50 சதவீதத்தை அதாவது 5,000/- ரூபாவை வழங்குவதற்கும், வைத்தியர்களுக்கும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கும் வழங்கப்படும் சில கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கும் மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.