2024-01-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு) |
100,000 கிலோ மீற்றர் மாற்று வீதிகள், புறவழிச்சாலைகள், கிராமிய வீதிகளை புனரமைத்தல் - 100,000 கிலோ மீற்றர் வீதிகள் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்டு தற்போது நிர்மாணிப்பு பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ள வீதிகளில் பாதுகாப்பான போக்குவரத்திற்குப் பொருத்தமான வகையில் 1,500 கிலோ மீற்றர்களை 2024 ஆம் ஆண்டினுள் விருத்தி செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான மொத்த செலவானது 20 பில்லியன் ரூபாவாக மதிப்பிடப்பட்டுள்ளதுடன், 2024 ஆம் ஆண்டின் 06 மாத காலத்திற்குள் வேலைகளை பூர்த்திசெய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கிணங்க, ஆண்டின் முதல் 06 மாத காலத்திற்குள் தெரிவுசெய்யப்பட்ட வீதிகளை போக்குவரத்துக்குப் பொருத்தமான நிலைக்கு கொண்டுவருவதற்கான நிகழ்ச்சித்திடத்தினை நடைமுறைப்படுத்துவதன் பொருட்டு போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |