• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-01-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சுக்கும் துருக்மெனிஸ்தான் வெளிநாட்டலுவல்கள் அமைச்சுக்கும் இடையில் 2023 ஆம் ஆண்டிலிருந்து 2025 ஆம் ஆண்டு வரையிலான ஒத்துழைப்பு நிகழ்ச்சித்திட்டம்
- இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சுக்கும் துருக்மெனிஸ்தான் வெளிநாட்டலுவல்கள் அமைச்சுக்கும் இடையில் 2023 ஆம் ஆண்டிலிருந்து 2025 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதிக்குரியதாக ஒத்துழைப்பு நிகழ்ச்சித்திட்ட ஒப்பந்தமொன்றை கைச்சாத்திடுவதற்கு இரு தரப்பினர்களுக்கும் இடையில் உடன்பாடு காணப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையில் அரசியல், பொருளாதார மற்றும் கலாசார ஒத்துழைப்பு உட்பட இரு தரப்புகளுக்குமிடையிலான உறவினை மேம்படுத்துவதற்கும் பலப்படுத்துவதற்கும் விரிவுபடுத்துவதற்கும் அதேபோன்று பரஸ்பர பிரச்சினைகள் தொடர்பில் கவனத்தை செலுத்துவதே இந்த ஒத்துழைப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் நோக்கங்களாகும். அதற்கிணங்க, இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சுக்கும் துருக்மெனிஸ்தான் வெளிநாட்டலுவல்கள் அமைச்சுக்கும் இடையில் உத்தேச ஒத்துழைப்பு நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் பொருட்டு வெளிநாட்டலுவல்கள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.