• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-01-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
வௌிநாடுகளிலுள்ள இலங்கை தூதரகங்களை மீளத் திறத்தல்
- 2021 / 2022 காலப்பகுதியினுள் தற்காலிகமாக மூடப்பட்ட பின்வரும் இலங்கை தூதரகங்களை மீளத் திறக்கும் தேவையானது இனங்கணாப்பட்டுள்ளது.

(i) சைப்பிரஸ் நிகோசியாவிலுள்ள இலங்கை கொன்சுயூலர் ஜெனரல் அலுவலகம்.

(ii) ஈராக் பக்தாத்திலுள்ள இலங்கை தூதரகம்.

(iii) ஜேர்மன் பிராங்க்போர்ட்டிலுள்ள இலங்கை கொன்சுயூலர் ஜெனரல் அலுவலகம்.

அதற்கிணங்க, மேற்போந்த இலங்கை தூதரகங்களை மீளத் திறப்பதன் பொருட்டு வெளிநாட்டலுவல்கள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.