• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-01-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
நிதி ஆணைக்குழுவினால் மாண்புமிகு சனாதிபதி அவர்களுக்கு 2024 ஆம் ஆண்டிற்குரியதாக சமர்ப்பிக்கப்பட்ட சிபாரிசுகள்
- நாட்டில் சம நிலையான பிராந்திய அபிவிருத்தியை எய்தும் நோக்குடன் மாகாண சபைகளுக்குத் தேவையான வளங்களை மதிப்பிடுவதற்கும் தேசிய வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் மாகாண சபைகளுக்கு ஒதுக்கப்படும் நிதி ஏற்பாடுகளை மிக பயனுள்ள வகையில் மாகாண சபைகளுக்கு வழங்கும் பொருட்டு சிபாரிசுகளை சமர்ப்பிப்பதற்குமாக அரசியலமைப்பின் 154ண ஆம் துணை உறுப்புரையின் கீழ் நிதி ஆணைக்குழுவானது தாபிக்கப்பட்டுள்ளது. இந்த ஆணைக்குழுவினால் மாண்புமிகு சனாதிபதி அவர்களுக்கு 2024 ஆம் ஆண்டிற்குரியதாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள பின்வரும் சிபாரிசுகளுக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

* 2024 ஆம் ஆண்டு சார்பில் மாகாண மூலதன மற்றும் மீண்டுவரும் தேவைகளை மதிப்பிடுவதற்கான சிபாரிசுகள்.

* 2024 ஆம் ஆண்டு சார்பில் அரசாங்கத்தின் கொடைகளை மாகாண சபைகளுக்கிடையில் ஒதுக்குதல் சம்பந்தமான சிபாரிசுகள்.

* மாகாண சபைகளுக்கு மிக பயனுள்ள வகையில் வளங்களை ஒதுக்குதல் மற்றும் குறித்த வளங்களை வினைத்திறனுடன் பயன்படுத்துவது தொடர்பில் கொள்கை ரீதியிலான சிபாரிசுகள்.

அதேபோன்று, 2024 ஆம் ஆண்டிற்குரியதாக நிதி ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த ஆணைக்குழுவின் சிபாரிசுகளுடனான அறிக்கையினை அரசியலமைப்பின் 154ண(7) ஆம் துணை உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டது.