• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-01-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
மெல்சிறிபுர பண்ணைக்குச் சொந்தமான 5 ஏக்கர் காணித் துண்டை மைதானமொன்றை நிர்மாணிப்பதற்காக வழங்குதல்
- தேசிய கால்நடைவளர்ப்பு அபிவிருத்தி சபைக்குச் சொந்தமான மெல்சிறிபுர பண்ணையிலிருந்து 5 ஏக்கர் காணியை பொது மைதானமொன்றை நிர்மாணிப்பதற்காக இப்பாகமுவ பிரதேசசபைக்கு உடைமையாக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, இந்த பண்ணையின் மெதமுள்ள பகுதியிலிருந்து 5 ஏக்கரை ஒதுக்குவதற்கு தேசிய கால்நடைவளர்ப்பு அபிவிருத்தி சபையின் பணிப்பாளர் சபையானது உடன்பாடு தெரிவித்துள்ளது. இந்த காணித் துண்டை இப்பாகமுவ பிரதேசசபைக்கு உடைமையாக்கும் பொருட்டு கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.