• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-12-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
உள்நாட்டு சந்தையில் முட்டை விலையை நிலையாக பேணுவதற்கு விலங்கு உற்பத்தி, சுகாதார திணைக்களத்தினால் சிபாரிசு செய்யப்பட்ட பண்ணைகளிலிருந்து முட்டை இறக்குமதி செய்தல்
- உள்நாட்டு சந்தையில் முட்டை விலையை நிலையாக பேணுவதற்கு விலங்கு உற்பத்தி, சுகாதார திணைக்களத்தினால் சிபாரிசு செய்யப்பட்ட பண்ணைகளிலிருந்து முட்டை இறக்குமதி செய்வதற்கு 2023‑08‑14 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, ஏற்கனவே வரையறுக்கப்பட்ட இலங்கை அரச (பொது) வர்த்தக கூட்டுத்தாபனத்தின் ஊடாக 155 மில்லியன் முட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதோடு, 2023‑12‑31 ஆம் திகதியன்றுக்கு முன்னர் மேலும் 18 மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்வதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது உள்நாட்டு திறந்த சந்தையில் முட்டையின் சில்லறை விலை அதிகரிக்கும் போக்கு நிலவுகின்றமையினால் விலங்கு உற்பத்தி, சுகாதார திணைக்களத்தினால் ஏற்கனவே சிபாரிசு செய்யப்பட்டுள்ள இந்திய பண்ணைகளிலிருந்து தொடர்ந்தும் முட்டை இறக்குமதி செய்யும் பொருட்டு வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.