2023-12-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு) |
நுவரெலியா, கண்டி மற்றும் பதுளை மாவட்டங்களில் தெரிவுசெய்யப்பட்ட பெருந்தோட்ட பாடசாலைகளில் உயர்தர மாணவர்களுக்காக 60 திறன் வகுப்பறைகளை தாபிக்கும் கருத்திட்டம் - இரண்டு வருட காலப்பகுதிக்குள் நுவரெலியா, கண்டி மற்றும் பதுளை மாவட்டங்களில் தெரிவுசெய்யப்பட்ட பெருந்தோட்ட பாடசாலைகளில் உயர்தர மாணவர்களுக்காக 60 திறன் வகுப்பறைகளை தாபிக்கும் முன்னோடி கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தும் பொருட்டு நிதி வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் உடன்பாடு தெரிவித்துள்ளது. இந்த முன்னோடி கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தேசிய திட்டமிடல் திணைக்களத்தினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. கருத்திட்டத்தின் மதிப்பீட்டு செலவு 526.20 மில்லியன் ரூபாவாகும் என்பதோடு, 2024 ஆம் ஆண்டு சார்பில் 310 மில்லியன் ரூபாவைக் கொண்ட நிதி ஏற்பாடானாது ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கும் நீர்வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சுக்கும் இடையில் உடன்படிக்கையொன்றைச் செய்துகொள்ளும் பொருட்டு நீர்வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |