2023-12-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு) |
வௌிநாட்டு தொழிலை எதிர்பார்ப்பவர்களுக்காக யாழ்ப்பாணம், ஹோமாகம மற்றும் அம்பாறை ஆகிய பிரதேசங்களில் பயிற்சி / புலம்பெயர் வள நிலையங்களைத் தாபித்தல் - வௌிநாட்டு தொழிலை எதிர்பார்ப்பவர்கள் சார்பில் துரித அதேபோன்று பயனமுடிவிட நாடுகளை இலக்காகக் கொண்ட விசேட பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள் இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் நடாத்தப்படுகின்றன. தற்போது நாடு முழுவதும் வாடகை அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்பட்ட கட்டிடங்களில் ஆகக்குறைந்த வசதிகளின் கீழ் இந்த பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள் நடாத்திச்செல்லப்படுகின்றன. ஆதலால் வௌிநாடுகளில் தொழில் வாய்ப்புகளை எதிர்பார்ப்பவர்களுக்குத் தேவையான பயிற்சியினை வழங்குவதற்கு இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு சொந்தமான பயிற்சி நிலையங்களை யாழ்ப்பாணம், ஹோமாகம மற்றும் அம்பாறை ஆகிய பிரதேசங்களில் தாபிக்கும் பொருட்டு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |