2023-12-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு) |
வரையறுக்கப்பட்ட இலங்கை அரச (பொது) வர்த்தக கூட்டுத்தாபனத்தின் ஊடாக சோளம் இறக்குமதி செய்தல் - திறந்த சந்தையில் போதுமான சோளக் கையிருப்பு இல்லாமையினால் கோழித்தீன் உற்பத்தியாளர்களுக்குத் தேவையான மூலப்பொருட்களில் பற்றாக்குறை நிலவுகின்றது. இதன் பொருட்டு தற்காலிக நடவடிக்கையொன்றாக விலங்கு உற்பத்தி, சுகாதார திணைக்களத்தினால் 15,000 மெற்றிக்தொன் சோளம் இறக்குமதி செய்வதற்கு வரையறுக்கப்பட்ட இலங்கை அரச (பொது) வர்த்தக கூட்டுத்தாபனத்திற்குத் தேவையான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, இலங்கை அரச (பொது) வர்த்தக கூட்டுத்தாபனத்தின் மூலம் பதிவு செய்யப்பட்ட வௌிநாட்டு வழங்குநர்களிடமிருந்து உச்சமாக 15,000 மெற்றிக்தொன் சோளம் பெற்றுக்கொள்ளும் பொருட்டு நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |