2023-12-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு) |
அவுஸ்திரேலியா அரசாங்கத்தின் மானிய உதவியின் கீழ் செயல்படுத்தப்படும் வளர்ச்சிக்கான நல்லாட்சி நிகழ்ச்சித்திட்டம் மற்றும் சந்தை அபிவிருத்தி வசதிகள் நிகழ்ச்சித்திட்டம் என்பவற்றை நீடித்தல் - வளர்ச்சிக்கான நல்லாட்சி நிகழ்ச்சித்திட்டம் மற்றும் சந்தை அபிவிருத்தி வசதிகள் நிகழ்ச்சித்திட்டம் என்பவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு அவுஸ்திரேலியா அரசாங்கத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் 2017 ஆம் ஆண்டில் ஒப்பந்தமொன்று செய்துகொள்ளப்பட்டுள்ளது. குறித்த இரண்டு நிகழ்ச்சித்திட்டங்களுக்கும் 42.1 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்கள் கொண்ட மேலதிக மானியத்தினை வழங்குவதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் உடன்பாடு தெரிவித்துள்ளது. அதற்கிணங்க, இந்த மானியத்தினைப் பெற்று இந்த இரண்டு கருத்திட்டங்களையும் மேலும் நடைமுறைப்படுத்துவதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கத்துடன் இணைந்த ஏற்பாடுகளை செய்துகொள்ளும் பொருட்டு நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |