2023-12-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு) |
2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க அந்நிய செலாவணி சட்டத்தின் 22 ஆம் பிரிவின் கீழ் புதிய கட்டளையொன்றை வௌியிடுதல் - சில மூலதன கொடுக்கல்வாங்கல்கள் மற்றும் நடப்பு பரிமாற்றங்கள் தொடர்பான சில வௌிமுக பண அனுப்பல்களை 2020 ஏப்ரல் மாதத்திலிருந்து செயல்வலுவுக்கு வரத்தக்கதாக தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு / வரையறுப்பதற்கு இயலுமாகும் வகையில் 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க அந்நிய செலாவணி சட்டத்தின் 22 ஆம் பிரிவின் கீழ் கட்டளையொன்றை வௌியிடுவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன் பின்னர், குறித்த கட்டளையின் செல்லுபடியாகும் காலத்தை பல சந்தர்ப்பங்களில் நீடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, நடைமுறையிலுள்ள கட்டளையின் செல்லுபடியாகும் காலமானது 2023‑12‑27 ஆம் திகதியுடன் முடிவடையவுள்ளது. தற்போதைய கட்டளையில் குறிப்பிடப்பட்டுள்ள இடைநிறுத்துகைகள் / வரையறைகளை பேணி வௌிமுக முதலீட்டுக் கணக்குகளின் ஊடாக ஊழியர் பங்கு உரிமை திட்டங்களில் அல்லது ஊழியர் பங்கு விருப்பத் திட்டங்களில் முதலீடு செய்வதற்கு தனிப்பட்ட குடியிருப்பாளர்கள் சார்பில் நிலவிய இடைநிறுத்துகையை நீக்கி, 2023‑12‑28 ஆம் திகதி தொடக்கம் செயல்வலுவுக்கு வரத்தக்கதாக மேலும் ஆறு (06) மாத காலத்திற்கு புதிய கட்டளையொன்றை வௌியிடுவதற்கும் இவ்வாறு வௌியிடும் கட்டளையை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |