2023-12-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு) |
காணி அனுமதிப் பத்திரதாரர்களுக்கும் கொடை பத்திரதாரர்களுக்கும் அரசாங்க காணிகளில் இறையிலி உரிமையினை வழங்கும் "உருமய நிகழ்ச்சித்திட்டம்" - காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டத்தின் கீழ் காணி அனுமதிப்பத்திரங்களும் கொடைப்பத்திரங்களும் வழங்கப்பட்டுள்ள விவசாயிகளை முதன்மையாகக் கொண்டு பொது மக்களுக்கு தாம் பயன்படுத்தி வரும் அல்லது அபிவிருத்தி செய்த காணிகளுக்கு இறையிலி உரிமை இல்லாமையினால் குறித்த காணியை மனித மற்றும் அபிவிருத்தி தேவைகளுக்கு பயன்படுத்தும் போது பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேர்ந்துள்ளது. ஆதலால், இந்தப் பிரச்சினையைக் குறைப்பதற்கு அத்தகைய காணிகளின் இறையிலி உரிமையை விவசாயிகளை முதன்மையாகக் கொண்டு பொது மக்களுக்கு வழங்கும் பொருட்டு நடைமுறையிலுள்ள சட்டக் கட்டமைப்பில் தேவையான நடவடிக்கையினை எடுப்பதற்கும் 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் குறித்த வேலைத்திட்டத்தை ஆரம்பித்து ஒருசில வருடங்களினுள் முழுமையாக பூர்த்தி செய்வதற்கும் இயலுமாகும் வகையில் "உருமய நிகழ்ச்சித்திட்டம்" என்னும் பெயரில் நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தும் பொருட்டு 2024 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்ட உரையின் போது மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் முன்மொழியப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சித்திட்டத்தை மூன்று கட்டங்களின் கீழ் நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதோடு, இதன் மூலம் இருபது லட்சம் குடும்பங்களுக்கு வீடு மற்றும் விவசாய காணிகளின் இறையிலி உரிமையினை வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கிணங்க உரிய நடவடிக்கைமுறைகளைப் பின்பற்றி காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டத்தின் கீழ் காணி அனுமதிப்பத்திரங்களும் கொடைப் பத்திரங்களும் வழங்கப்பட்டுள்ள காணித்துண்டுகள் சார்பில் அரசாங்க காணி கட்டளைச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் இறையிலி உரிமையுடனான கொடைப் பத்திரமொன்றை வழங்கும் பொருட்டு சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |