• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-12-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
தடுப்புக் காவலில் வைத்திருப்பதற்குப் பதிலாக வீட்டுக் காவலில் வைத்திருக்கும் பொருட்டு சட்ட ஏற்பாடுகளை அறிமுகப்படுத்துதல்
- இலங்கை சிறைச்சாலைகளில் நிலவும் இடப்பற்றாக்குறை நீண்டகால பிரச்சினையொன்றாக இனங்காணப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினைக்கு தீர்வொன்றாக தடுப்புக் காவலில் வைத்திருப்பதற்கு / சிறையிலடைப்பதற்கு பதிலாக வழக்குகளின் சந்தேக நபர்கள் மற்றும் குற்றவாளிகளை வீட்டுக் காவலில் வைப்பதற்கு சட்ட ஏற்பாடுகளை அறிமுகப்படுத்துவதற்கு பொருத்தமான சிபாரிசுகளை சமர்ப்பிக்கும் பொருட்டு உயர் நீதிமன்ற நீதியரசர் ஒருவரின் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தியோகத்தர்கள் குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையினை அடிப்படையாகக் கொண்டு பொருத்தமான சட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு சட்டமூலமொன்றைத் தயாரிக்குமாறு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.