• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-12-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
ரங்கல பொலிஸ் நிலையத்தை தாபிப்பதற்காக காணித் துண்டொன்றை இலங்கை பொலிசுக்காக சுவீகரித்தல்
- தற்போது கெட்டகஹவல பெருந்தோட்ட கம்பனிக்குச் சொந்தமான கட்டிடமொன்றில் வாடகை அடிப்படையில் நடாத்திச்செல்லப்படும் ரங்கல பொலிஸ் நிலையத்தில் போதியளவு இடவசதியின்மையினால் அங்கு கடமைபுரியும் உத்தியோகத்தர்கள் தமது கடமைகளை செய்வதில் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். அதனால், ரங்கல பொலிஸ் நிலையத்தை தாபிப்பதற்காக உடபுசல்லாவ பெருந்தோட்ட கம்பனிக்குச் சொந்தமான டக்வாரி தோட்டத்திலிருந்து 02 ஏக்கர் காணியை இலங்கை பொலிசுக்காக சுவீகரிக்கும் பொருட்டு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.