2023-12-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு) |
மீள் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துதலை துரிதப்படுத்துவதற்கான பொறிமுறையொன்றை நிறுவுதல் - 2030 ஆம் ஆண்டளவில் தேசிய ரீதியில் நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்பு இலக்குகளை அடைவதற்காக மீள் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி கருத்திட்டங்களை துரிதமாக நடைமுறைப்படுத்தும் தேவை கண்டறியப்பட்டுள்ளது. தற்போது நடைமுறையிலுள்ள வழிமுறைகளை பின்பற்றி அவ்வாறான கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு எடுக்கும் காலம் அதேபோன்று குறித்த வழிமுறைக்கு அமைவாக நடவடிக்கை எடுக்கும் போது ஆர்வமுள்ள முதலீட்டாளர்கள் முகங்கொடுக்க நேரிடும் சிரமங்களை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, மீள் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி கருத்திட்டங்களை துரிதமாக நடைமுறைப்படுத்துவதற்கு புதிய வழிமுறையொன்று அறிமுகப்படுத்த வேண்டுமென 2023-11-20 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அதற்கிணங்க, மீள் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி கருத்திட்டம் தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்கும் உரிய நிறுவனங்களினால் குறித்த தீர்மானங்களை வினைத்திறன்மிக்கதாகவும் துரிதமாகவும் நடைமுறைப்படுத்துவது பற்றி மேற்பார்வை செய்வதற்கு பின்வரும் நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் கூட்டு நிலையியற் குழுவொன்றை நியமிக்கும் பொருட்டு மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் சமர்ப்பித்த பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
* சனாதிபதியின் செயலாளர் (குழு தலைவர்) * பிரதம அமைச்சரின் அலுவலகம் * நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சு * முதலீட்டு மேம்பாட்டு அமைச்சு * வனசீவராசிகள் மற்றும் வனவளப் பாதுகாப்பு அமைச்சு * சுற்றாடல் அமைச்சு * சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சு * கைத்தொழில் அமைச்சு * மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு * நீர்ப்பாசன அமைச்சு * நீர்வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சு * இலங்கை நிலைபேறுடைய வலுசக்தி அதிகாரசபை * இலங்கை மின்சார சபை |