• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-12-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தின் பணிகளை பயனுள்ள வகையிலும் வினைத்திறன்மிக்கதுமாக நிறைவேற்றுவதற்கு மாவட்ட செயலாளர்களுக்கு அதிகாரங்களை கையளித்தல்
- 1996 ஆம் ஆண்டில் அப்போதைய சமூகசேவைகள் மற்றும் சமூக நலன்புரி அமைச்சின் கீழ் நிவாரண, புனர்வாழ்வு மற்றும் மறுசீரமைப்பு பணிகள் என்பவற்றை திட்டமிட்டு நடைமுறைப்படுத்துவதற்காக தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையம் தாபிக்கப்பட்டதுடன், குறித்த நிறுவனமானது 2007‑01‑01 ஆம் திகதி தொடக்கம் தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையமெனப் பெயரிடப்பட்டு அரச நிறுவனமொன்றாக இதுவரை செயற்பட்டு வருகின்றது. இந்த நிலையத்தின் பணிகளை பயனுள்ள வகையிலும் வினைத்திறன்மிக்கதுமாக நிறைவேற்றுவதற்கு இயலுமாகும் வகையில் மாவட்ட செயலாளர்களுக்கும் / அரசாங்க அதிபர்களுக்கும் தேவையான அதிகாரங்களை கையளிக்கும் பொருட்டு பாதுகாப்பு அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.