2023-12-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு) |
தண்டனைச் சட்ட கோவைக்கான திருத்தம் (19 ஆம் அத்தியாயம்) ‑ தண்டப் பணங்களை அதிகரித்தல் - தற்போதைய நிதி பெறுமதிக்கு ஒருங்கிணைவாக தண்டனைச் சட்ட கோவையில் குறிப்பிடப்பட்டுள்ள தண்டப் பணங்களைத் திருத்தும் பொருட்டு சட்டமூலமொன்றை தயாரிப்பதற்கு 2022‑12‑12 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அ்ஙகீகாரம் வழங்கப்பட்டது. அதற்கிணங்க சட்டவரைநரினால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் உடன்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர், அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |