• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-12-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக் கோவைக்கான திருத்தம்
- இனங்காணப்பட்ட சில சந்தர்ப்பத்திற்கேற்ற நிலைமைகளின் கீழ் சந்தேக நபர் / குற்றவாளி நீதிமன்றத்தில் தனிப்பட்ட வகையில் தோற்றும் தேவையினை வழக்கு விசாரணையின் போது நீக்க முடியுமா என்பது பற்றி தீர்மானிப்பதற்கு குற்றவியல் நீதிமன்றத்திற்கு இயலுமாகும் வகையில் சட்ட ஏற்பாடுகளைச் செய்வதற்கு 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக் கோவையைத் திருத்துவதற்கு 2021‑09‑07 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அ்ஙகீகாரம் வழங்கப்பட்டது. அதற்கிணங்க தயாரிக்கப்பட்ட சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு முன்னர், அக்கறையுள்ள சில தரப்புகள் மேலும் விடயங்களை முன்வைத்துள்ளன. இந்த விடயங்களையும் கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, ஏற்கனவே வரையப்பட்டுள்ள சட்டமூலத்தை மேலும் விருத்திச்செய்து 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக் கோவையை திருத்தும் பொருட்டு புதிய சட்டமூலமொன்றை வரையுமாறு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.