• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-12-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
இலங்கைக்கும் லட்வியாவுக்கும் இடையில் தண்டனை விதிக்கப்பட்டவர்களை ஒப்படைப்பதற்கான உடன்படிக்கை
- இலங்கையின் நீதிமன்றமொன்றினால் வேறு நாடொன்றின் பிரசையொருவரை குற்றவாளியாக்கி தண்டனை விதித்து சிறைச்சாலையில் அடைக்கப்பட்டால் குறித்த நபரின் தண்டனையை அவர் பிரசையொருவர் என உரித்து பாராட்டும் நாட்டில் கழிப்பதற்கு இயலுமாகும் வகையில் உரிய ஏற்பாடுகள் 1995 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க தண்டனை விதிக்கப்பட்டவர்களை ஒப்படைக்கும் சட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளது. அதேபோன்று ஏதேனும் குறித்துரைக்கப்பட்ட நாடொன்றில் சிறையிலிடும் தண்டனைக்கு ஆளாக்கப்பட்ட இலங்கை பிரசையொருவருக்கு அவருடைய மீதி தண்டனை காலத்தை இலங்கையிலுள்ள சிறைச்சாலையொன்றில் கழிப்பதற்கான ஏற்பாடுகளும் இந்த சட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, இலங்கைக்கும் லட்வியாவுக்கும் இடையில் தண்டனை விதிக்கப்பட்டவர்களை ஒப்படைப்பதற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் திணைக்களத்துடனும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சுடனும் கலந்துரையாடி உடன்பாடு காணப்பட்டுள்ள இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கும் அதன் பின்னர் இந்த உடன்படிக்கைக்கு செயல்வலுவுக்காம் அளிப்பதற்குமாக நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.