• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-12-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையில் குற்றவியல் விடயங்களின் போது சட்ட ரீதியிலான பரஸ்பர ஒத்துழைப்பு பற்றிய உடன்படிக்கை
- இலங்கை சனநாயக சோசலிச குடியரசுக்கும் மாலைதீவு குடியரசுக்கும் இடையில் குற்றவியல் விடயங்களின் போது சட்ட ரீதியிலான பரஸ்பர ஒத்துழைப்பு பற்றிய உடன்படிக்கையினை செய்துகொள்வதற்கு 2022‑09‑22 ஆம் திகதியன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்த போதிலும், மாலைதீவு உத்தேச உடன்படிக்கைக்கு சில திருத்தங்களை முன்மொழிந்ததன் காரணமாக இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திடப்படவில்லை. அதன் பின்னர் இரு தரப்பினர்களினதும் உடன்பாட்டுடன் திருத்தப்பட்ட புதிய வரைவானது தயாரிக்கப்பட்டுள்ளதோடு, அதன் பொருட்டு சட்டமா அதிபரின் உடன்பாடும் கிடைக்கப்பெற்றுள்ளது. அதற்கிணங்க, இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கும் அதன் பின்னர் இந்த உடன்படிக்கையை இரு நாட்டினதும் இராஜதந்திர தூதரகங்களினால் செயல்வலுவாக்கமளிப்பதற்கும் நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.