2023-12-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு) |
உலக வங்கியினால் நிதியளிக்கப்படும் நிதித்துறை பாதுகாப்பு வலையமைப்பை பலப்படுத்தும் கருத்திட்டம் - நிதித்துறையின் பாதுகாப்பு வலையமைப்பை பலப்படுத்தும் கருத்திட்டம் உலக வங்கியின் நிதியின் கீழ் நடைமுறைப்படுத்துவதற்கு 2023‑04‑24 ஆம் திகதியன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கொள்கை ரீதியில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. குறித்த இந்த அங்கீகாரத்தின் பிரகாரம் கடன் இணக்கப்பேச்சுக்களின் போது இலங்கை வைப்பு காப்புறுதி திட்டத்தை மூலதனமயப்படுத்தல், மத்திய வங்கியின் நிறுவன ஆற்றலை அபிவிருத்தி செய்தல் மற்றும் இந்தக் கருத்திட்டத்தின் நடைமுறைப்படுத்தல் என்னும் ஆக்கக்கூறுகளின் கீழ் 150 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர் கொண்ட கடன் தொகையினை வழங்குவதற்கு உலக வங்கி உடன்பாடு தெரிவித்துள்ளது. அதற்கிணங்க, உரிய உடன்படிக்கைகளை செய்துகொள்ளும் பொருட்டு நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |