• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-12-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் நியதிச்சட்டம், புரிந்துணர்வு உடன்படிக்கை மற்றும் தலைமையக உடன்படிக்கையில் கைச்சாத்திடுதல்
- இந்து சமுத்திர வலையத்தின் சமுத்திர பாதுகாப்பு உட்பட உறுப்பு நாடுகள் பொதுவான பாதுகாப்பு அச்சுறுத்தல் மற்றும் சவால்களுக்கு முகங்கொடுத்தல் அதேபோன்று உறுப்பு நாடுகளின் மதிக்கவேண்டிய முறைமைகளுக்கு மதிப்பளித்து நடைமுறைப்படுத்தும் சமவாயமொன்றாக கொழும்பு பாதுகாப்பு மாநாடானது தாபிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த மாநாட்டில் இந்தியா, மாலைத்தீவு, மொரீசியஸ் இராச்சியம் மற்றும் இலங்கை என்பன உறுப்பு நாடுகளாகவும் பங்களாதேஷ் மற்றும் சீசல்ஸ் இராச்சியம் என்பன அவதானிப்பு நாடுகளாகவும் செயற்படும் பிராந்திய அமைப்பொன்றாக இது செயலாற்றுகின்றது. இந்த மாநாட்டின் பணிகளை முறைப்படுத்துவதற்காக நியதிச் சட்டமொனறை கைச்சாத்திடுவதற்கும் கொழும்பு நகரத்தில் தாபிப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ள இந்த அமைப்பின் செயலகத்திற்குரிய புரிந்துணர்வு உடன்படிக்கையினை உறுப்பு நாடுகளுக்கிடையில் கைச்சாத்திடுவதற்கும் செயலக பணிகளுக்குரியதாக தலைமையக உடன்படிக்கையொன்றை இலங்கைக்கும் செயலாளர் நாயகத்திற்கும் இடையில் கைச்சாத்திடுவதற்கும் பாதுகாப்பு அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.