• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-11-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
காணி சீர்த்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான மடுவன்வெல நிதன்கம என்னும் காணியிலிருந்து ஒரு பகுதியை வரையறுக்கப்பட்ட இலங்கை புகையிலைக் கம்பனிக்கு வனச் செய்கைக்காக குத்தகை அடிப்படையில் வழங்குதல்
- இரத்தினபுரி மாவட்டத்தின் எம்பிலிபிட்டிய பிரதேச செயலாளர் பிரிவின் பனாமுர கிராம உத்தியோகத்தர் பிரிவில் காணி சீர்த்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான மடுவன்வெல நிதன்கம என்னும் காணியிலிருந்து ஒரு பகுதியை வனச் செய்கை கருத்திட்டமொன்றுக்கு பெற்றுத்தருமாறு வரையறுக்கப்பட்ட இலங்கை புகையிலைக் கம்பனி கோரிக்கையினை முன்வைத்துள்ளது. இந்த கம்பனியினால் முன்வைக்கப்பட்டுள்ள கருத்திட்ட அறிக்கையானது மதிப்பிடப்பட்டுள்ளது. அதற்கிணங்க, மடுவன்வெல நிதன்கம என்னும் காணியிலிருந்து ஏக்கர் 87 றூட் 3 பேர்ச்சர்ஸ் 25 விஸ்தீரணமுடைய காணியை வரையறுக்கப்பட்ட இலங்கை புகையிலைக் கம்பனிக்கு வனச் செய்கை கருத்திட்டமொன்றிற்காக நீண்டகால குத்தகை அடிப்படையில் 30 வருடகாலத்திற்கு வழங்கும் பொருட்டு சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.