2023-11-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு) |
2050 காபன் நிகர பூச்சிய பயணத் திட்டம் மற்றும் மூலோபாய திட்டம் - பாரிஸ் உடன்படிக்கையின் தரப்பொன்றாக இலங்கை ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் பற்றிய கட்டமைக்கப்பட்ட சமவாயத்திற்கு சமர்ப்பித்துள்ள இற்றைப்படுத்தப்பட்ட தேசிய ரீதியில் நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்பின் மூலம் 2050 ஆம் ஆண்டளவில் காபன் நிகர பூச்சிய நிலையினை அடைவதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, குறித்த குறியிலக்கினை அடைவதற்கு இயலுமாகும் வகையில் உரிய தரப்பினர்களுடன் செய்துகொள்ளப்படும் விரிவான ஆலோசனைகளின் மூலம் நிபுணர்கள் குழுவொன்றினால் 2050 ஆம் ஆண்டளவில் காபனற்ற நாடொன்றாக மாற்றுவதற்குத் தேவைப்படும் பசுமை வாயு வௌியேற்றலைக் குறைத்தல் மற்றும் காபன் தன்மயமாக்கலை அதிகரித்தல் போன்றவற்றிற்கு சந்தர்ப்பமுள்ள செயற்பாடுகளை இனங்கண்டு 2050 ஆம் ஆண்டளவில் காபன் நிகர பூச்சிய பயணத் திட்டம் மற்றும் மூலோபாய திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, குறித்த பயணத் திட்டம் மற்றும் மூலோபாய திட்டம் என்பவற்றை நடைமுறைப்படுத்தும் பொருட்டு சுற்றாடல் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |