• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-11-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
இலங்கைக்கும் நேபாள அரசாங்கத்திற்கும் இடையில் உயர் கல்வி ஒத்துழைப்பு சார்பில் உடன்படிக்கையினை செய்து கொள்ளல்
- இலங்கை சனநாயக சோசலிச குடியரசுக்கும் நேபாள அரசாங்கத்திற்கும் இடையில் உயர் கல்வித்துறையில் பரஸ்பர ஒத்துழைப்பினை பலப்படுத்தல், விரிவுபடுத்துதல் மற்றும் இரு நாடுகளினதும் உயர் கல்வி நிறுவனங்களுக்கிடையில் உறவுகளை மேலும் விரிவுபடுத்தல் போன்ற நோக்கில் உயர் கல்வித்துறையின் ஒத்துழைப்பு தொடர்பில் உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. இந்த உடன்படிக்கையின் மூலம் இலங்கையின் உயர் கல்வித்துறையின் எதிர்கால முன்னேற்றம் சார்பில் இரு நாடுகளுக்கும் இடையில் மேற்கொள்ளப்படும் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள் அதேபோன்று உயர் கல்வி முறைக்குரிய பாடத்திட்டங்கள் உட்பட விஞ்ஞான மற்றும் கல்வி முறைகளை பரிமாறிக்கொள்வதற்கும் இரு தரப்பினர்களினாலும் நடாத்தப்படும் உயர் கல்வி சம்மேளனங்கள், மாநாடுகளில் கலந்துகொள்வதற்கும் வாய்ப்பு கிடைக்கப்பெறும். அதற்கிணங்க, இலங்கை சனநாயக சோசலிச குடியரசு அரசாங்கத்திற்கும் நேபாள அரசாங்கத்திற்கும் இடையில் உத்தேச உடன்படிக்கையினை கைச்சாத்திடும் பொருட்டு கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.