• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-11-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
இலத்திரனியல் ஊடகங்களுக்கான ஒளிபரப்பு ஒழுங்குறுத்துகை ஆணைக்குழு சட்டமொன்றை அறிமுகப்படுத்துதல்
- பேச்சு மற்றும் கருத்து வௌியிடும் சுதந்திரத்தை உச்சமாக பாதுகாத்து உயர் தரத்திலான ஊடகத் துறையை உறுதி செய்யும் நோக்குடன் இலத்திரனியல் ஊடகங்களுக்கான ஒளிபரப்பு ஒழுங்குறுத்துகை ஆணைக்குழு சட்டமொன்றை அறிமுகப்படுத்துவதன் பொருட்டு சட்டமூலமொன்றை வரைவதற்கு வெகுசன ஊடக அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்பானது 2022‑09‑22 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. உத்தேச சட்டமூலத்தை வரையும் போது கவனம் செலுத்தவேண்டிய கொள்கை ரீதியிலான விடயங்கள் எவை என்பது தொடர்பில் சிபாரிசுகளை சமர்ப்பிப்பதற்காக நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரின் தலைமையில் அமைச்சரவை உபகுழுவொன்று நியமிக்கப்பட்டதோடு, குறித்த குழுவினால் உத்தேச ஒளிபரப்பு ஒழுங்குறுத்துகை ஆணைக்குழு சட்டமூலத்தை வரைவதற்கு அடிப்படையாகக் கொள்ளும் பொருட்டு பொருத்தமான ஏற்பாடுகளுடன்கூடிய ஆரம்ப சட்டமூலமொன்றினை தயாரித்துள்ளது. இந்த ஆரம்ப வரைவினை அடிப்படையாகக் கொண்டு சட்டமூலமொன்றை வரையுமாறு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு வெகுசன ஊடக அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.