• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-11-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
இலங்கை ஊழியர்களை சேவையில் ஈடுபடுத்துவது தொடர்பில் இலங்கை குடியரசுக்கும் இஸ்ரேல் அரசுக்கும் இடையில் உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டம்
- இலங்கை ஊழியர்களை இஸ்ரேல் இராச்சியத்தின் குறித்துரைக்கப்பட்ட தொழிற்சந்தை பிரிவுகளில் தற்காலிக சேவையில் ஈடுபடுத்துவது தொடர்பில் இஸ்ரேல் அரசாங்கத்துடன் ஒப்பந்தமொன்றைச் செய்துகொள்வதற்கும் அதன் பொருட்டு இரு தரப்புக்கும் இடையில் ஆரம்ப ஆவணத்தில் கைச்சாத்திடுவதற்கும் 2020‑02‑05 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. குறித்த ஒப்பந்தத்திற்குரியதாக இஸ்ரேலில் கமத்தொழில் நடவடிக்கைகளுக்காக ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அந்நாட்டு சனத்தொகை, புலம்பெயர்ந்த மற்றும் தேச எல்லை அதிகாரசபையானது எதிர்பார்க்கிறது. அதற்கிணங்க, இருதரப்பினர்களுக்கும் இடையில் உரிய செயற்பாட்டுத் திட்டமானது 2023‑11‑06 ஆம் திகதியன்று கைச்சாத்திடப்பட்டுள்ளதெனக் குறிப்பிட்டு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்கள் அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.