• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-11-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
இலங்கை பத்திரிகை பேரவைக்கும் இந்திய பத்திரிகை பேரவைக்கும் இடையில் ஒத்துழைப்பு தொடர்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்
- விடயம் சார்ந்த செயலமர்வுகள் மற்றும் சம்மேளனங்கள் என்பவற்றை நடாத்துவதன் மூலம் ஊடகவியலாளர்களின் அறிவு, திறமையினை விருத்தி செய்தல், இருதரப்புக்கும் இடையில் வள பரிமாற்றல் நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல், வெகுசன ஊடக ஒழுக்குநெறிகளை விருத்தி செய்வதற்கான செயற்பாடுகள் மற்றும் ஊடக சுதந்திரம் உட்பட அமைதியான ஊடக பாவனையை பிரபலப்படுத்தல் போன்ற துறைகளுக்குரியதாக இரு தரப்பினருக்கும் இடையில் ஒத்துழைப்பின் பொருட்டு இலங்கை பத்திரிகை பேரவைக்கும் இந்திய பத்திரிகை பேரவைக்கும் இடையில் 05 வருட காலப்பகுதியின் சார்பில் 2018‑11‑16 ஆம் திகதியன்று புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று சைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் காலப்பகுதியானது ஏற்கனவே முடிவடைந்துள்ளமையினால், மேலும் 05 வருட காலப்பகுதிக்கு புதிய புரிந்துணர்வு உடன்படிக்கையினை கைச்சாத்திடுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. இதன் பொருட்டிலான உத்தேச வரைவு ஒப்பந்தத்திற்கு வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் உடன்பாடு கிடைக்கப் பெற்றுள்ளது. அதற்கிணங்க உத்தேச புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் பொருட்டு வெகுசன ஊடக அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.