• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-11-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
மோசடி தடுப்பு கட்டளைச்சட்டத்திற்கான திருத்தம்
- 2022 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்க மரணசாசன (திருத்த) சட்டத்திற்கும் 2022 ஆம் ஆண்டின் 31 ஆம் இலக்க நொத்தாரிஸ் (திருத்த) சட்டத்திற்கும் அறிமுகப்படுத்தப்பட்ட திருத்தங்களுக்கு அமைவாக 2022 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க சட்டத்தின் மூலம் மோசடி தடுப்பு கட்டளைச்சட்டமானது திருத்தப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டின் 31 ஆம் இலக்க நொத்தாரிஸ் (திருத்த) சட்டத்தின் மூலம் எழுந்துள்ள ஐயப்பாடுடைய பொருள் கோரல்கள் / உட்சிக்கல் நிலைமையைத் தவிர்க்கும் பொருட்டு குறித்த திருத்த சட்டத்தை மேலும் திருத்துவதற்கும் அதற்கு ஒருங்கிணைவாக மோசடி தடுப்பு கட்டளைச்சட்டத்திலுள்ள ஏற்பாடுகளை திருத்துவதற்கும் 2023‑05‑08 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, மோசடி தடுப்பு கட்டளைச்சட்டத்தை திருத்தும் பொருட்டு சட்டவரைநரினால் தயாரிக்கப்பட்ட சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் உடன்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது. அதற்கிணங்க, இந்த சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர், அங்கீகாரத்தின் பொருட்டு பாரளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.