2023-11-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு) |
(235 ஆம் அத்தியாயம்) சுங்க கட்டளைச்சட்டத்திற்கான உத்தேச திருத்தங்கள் - வருமான சேகரிப்பு, வௌிப்படத்தன்மை, வர்த்தகத்திற்கு வசதியளித்தல் மற்றும் இணக்கத்தேவைகள் போன்ற விடயங்கள் சம்பந்தமாக (235 ஆம் அத்தியாயம்) சுங்க கட்டளைச்சட்டத்தின் 47, 57 மற்றும் 153 ஆம் பிரிவுகளைத் திருத்தும் பொருட்டு நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு 2022‑10‑03 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று இலங்கை சுங்கத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள பொருட்களை விடுவிப்பதற்குரியதாக நிலவும் பிரச்சினைகளை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்காக மாண்புமிகு துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சரின் தலைமையில் நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் குழுவினால் முன்வைக்கப்பட்டிருந்த சிபாரிசுகளை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு சுங்க கட்டளைச்சட்டத்தின் உரிய ஏற்பாடுகளைத் திருத்துவதற்கும் 2023‑09‑04 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க உத்தேச திருத்தங்களுக்கு ஏற்புடையதாக சுங்க கட்டளைச்சட்டத்தை திருத்தும் பொருட்டு சட்டமூலமொன்றை வரையுமாறு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்குவதற்கு நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |