• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-11-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
அரசாங்க தனியார் பங்குடமையாக கிரிமண்டல மாவத்தையில் கலப்பு அபிவிருத்தி கருத்திட்ட பிரேரிப்பு சார்பில் ஆர்வ வௌிப்படுத்தல்களைக் கோருதல்
- இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தினால் அபிவிருத்தி செய்யப்பட்ட சுமார் 5 ஏக்கர் விஸ்தீரணமுடைய காணி நாவல, கிரிமண்டல மாவத்தையில் அமைந்துள்ளதோடு, அதில் கலப்பு அபிவிருத்தி கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவது பொருத்தமானதென இனங்காணப்பட்டுள்ளது. அதற்கிணங்க, இந்தக் காணியிலிருந்து முதலாம் கட்டமாக 2.67 ஏக்கர் விஸ்தீரணமுடைய காணியிலும் இரண்டாம் கட்டத்தின் கீழ் மீதி 2.33 ஏக்கர் விஸ்தீரணமுடைய காணியிலும் அரசாங்க தனியார் பங்குடமை திட்டத்தின் கீழ் கலப்பு அபிவிருத்தி கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு ஆர்வமுள்ள முதலீட்டாளர்களிடமிருந்து பிரேரிப்புகளை கோரும் பொருட்டு தேவையான நடவடிக்கையினை எடுப்பதற்காக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.