2023-11-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு) |
பாரிய அம்பாந்தோட்டை அபிவிருத்தி கருத்திட்டத்தின் கீழ் காணி சுவீகரித்தமையினால் வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு மாற்றுக் காணிகளை வழங்குதல் - பாரிய அம்பாந்தோட்டை அபிவிருத்தி கருத்திட்டம் காரணமாக 97 குடும்பங்கள் வீடுகளை இழந்துள்ளமையினால் அவர்களுக்கு மாற்றுக் காணிகள் வழங்கப்பட வேண்டியுள்ளது. இதன் பொருட்டு அம்பாந்தோட்டை சிறிபோபுற பிரதேசத்தில் அமைந்துள்ள சுமார் 10.11 ஹெக்டயார் விஸ்தீரணமுடைய அரசாங்க காணி இனங்காணப்பட்டுள்ளது. இந்தக் காணியிலிருந்து குடியிருப்புக்காக பயன்படுத்துவதற்கு 126 காணித் துண்டுகள் இனங்காணப்பட்டுள்ளதோடு, ஏற்கனவே வீடுகளை இழந்த 97 குடும்பளிலிருந்து 84 குடும்பங்களுக்கு காணித் துண்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இது சம்பந்தமாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரினால் பிரேரிக்கப்பட்ட கவனத்திற்கு எடுத்துக் கொண்டு பாரிய அம்பாந்தோட்டை அபிவிருத்தி கருத்திட்டம் காரணமாக வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு அம்பாந்தோட்டை சிறிபோபுற பிரதேசத்தில் அமைந்துள்ள சுமார் 10.11 ஹெக்டயார் விஸ்தீரணமுடைய அரசாங்க காணியிலிருந்து காணித் துண்டுகளை ஒதுக்குவதற்கும் இந்த காணித் துண்டுகள் சார்பில் காணி ஆணையாளர் நாயகத்தின் வழிகாட்டலின் கீழ் சட்டபூர்வ கொடைப் பத்திரங்களை வழங்குவதற்கும் அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |