2023-10-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
மின்சாரம் வழங்குவது சம்பந்தமாகவுள்ள பொதுக் கொள்கை வழிகாட்டல்களைத் திருத்துதல் - 2009 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க இலங்கை மின்சார சட்டத்திலுள்ள ஏற்பாடுகளுக்கு அமைவாக அமைச்சரவையின் அங்கீகாரத்தின் கீழ் மின்சாரம் வழங்குவது சம்பந்தமாகவுள்ள பொதுக் கொள்கை வழிகாட்டலைத் தயாரிப்பதற்கு மின்சாரம் என்னும் விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சருக்கு அதிகாரம் கையளிக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க நடைமுறையிலுள்ள பொதுக் கொள்கை வழிகாட்டலுக்கு அமைவாக மின்சாரக் கட்டணங்களை திருத்தும் கால எல்லையானது ஆறு (06) மாதங்களாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆயினும் அதற்கமைய நடவடடிக்கை எடுப்பதன் விளைவாக பொதுமக்கள் முகங்கொடுக்க நேரிடும் சிரமங்களை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு உரிய கால எல்லையை மூன்று (03) மாதங்களாக திருத்துவதற்கும் இலங்கை மின்சார சபையின் வலுசக்தி அனுப்பீட்டு கணக்காய்வினை நடைமுறைப்படுத்துவதற்கும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் நீர் மின்சார எதிர்வுகூறலை பலப்படுத்துவதற்கும் இயலுமாகும் வகையில் தற்போது நடைமுறையிலுள்ள பொதுக் கொள்கை வழிகாட்டலைத் திருத்தும் பொருட்டு நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினாலும் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சரினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |