• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-10-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வருமான அடிப்படையிலமைந்த அரசிறை ஒருங்கிணைப்பினை வலுப்படுத்துவதற்கான வரி கொள்கை மறுசீரமைப்புகள்
- கடனின் நிலையான தன்மையை உறுதிசெய்யும் நோக்கில் வருமான அடிப்படையிலமைந்த அரசிறை நிதி நிலைப்படுத்தல் சார்பில் 2022 யூன் மாதம் தொடக்கம் வரி அடிப்படை அதிகரிக்கும் மற்றும் அதிகரித்துச் செல்லும் வரிக் கொள்கைப் பிரேரிப்புகள் பல நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதோடு, இதன் பெறுபேறாக 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பீட்டளவில் 2023 ஆம் ஆண்டின் முதல் 09 மாத காலப்பகுதியில் அரசாங்கத்தின் வரி வருமானம் 51 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. ஆயினும், சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாடு காணப்பட்டுள்ள வரி திரட்டல் குறியிலக்கினை அடைவதற்கு இது வரை முடியாமற்போயுள்ளது. அதற்கிணங்க, சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பட்டுள்ளவாறு வரி வருமானம் மற்றும் ஆரம்ப நிலுவை குறியிலக்குகளை நிறைவு செய்வதற்கு இயலுமாகும் வகையில் நடைமுறையிலுள்ள பெறுமதி சேர்க்கப்பட்ட வரி வீதத்தை 2024‑01‑01 ஆம் திகதி தொடக்கம் செயல்வலுவுக்கு வரத்தக்கதாக 18 சதவீதத்தால் அதிகரிப்பதற்கும் நடைமுறையிலுள்ள பெறுமதி சேர்க்கப்பட்ட வரி ஏற்புடையதாகாத சில பொருட்கள் சேவைகளின் மீது இந்த விரியினை விதிப்பது உட்பட சில புதிய வரி பிரேரிப்புகளை 2024‑01‑01 ஆம் திகதி தொடக்கம் நடைமுறைப்படுத்துவதற்கும் உரிய சட்டங்களை திருத்துவதற்கும் அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.