2023-10-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
தேசிய கல்விக் கொள்கைக் கட்டமைப்பை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல் - தேசிய கல்விக் கொள்கைக் கட்டமைப்பொன்றைத் தயாரித்து பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பொருட்டு தேவையான நடவடிக்கையினை எடுப்பதற்காக மாண்புமிகு சனாதிபதி அவர்களின் தலைமையில் அமைச்சரவை உபகுழுவொன்றையும் இந்த உபகுழுவுக்கும் ஒத்தாசை நல்கும் பொருட்டுபிரதம அமைச்சரின் செயலாளரின் தலைமையில் 25 உறுப்பினர்களைக் கொண்ட நிபுணர்கள் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளதோடு, இந்த நிபுணர்கள் குழுவினர் தொடர்புபட்ட விசேட துறைகள் மற்றும் விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தி தேசிய கல்விக் கொள்கைக் கட்டமைப்பானது வரையப்பட்டுள்ளது. இந்த வரைவு சார்பில் அமைச்சரவை உபகுழுவினால் முன்வைக்கப்பட்ட அவதானிப்புரைகள் மற்றும் சிபாரிசுகளை உள்ளடக்கி மேலும் விருத்தி செய்து, "தேசிய கல்விக் கொள்கைக் கட்டமைப்பு - 2023 - 2033” தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த தேசிய கல்விக் கொள்கைக் கட்டமைப்பை பாராளுமன்றத்தின் கல்வி பற்றிய துறைசார் மேற்பார்வை குழுவுக்கு தொடர்புபடுத்துவதற்கும் அதன் பின்னர், அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |