• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-10-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையில் மலையக தமிழ் மக்களை இலங்கை சமூகத்துடன் முழுமையாக இணைப்பதற்கான நிகழ்ச்சித்திட்டங்களை நடாத்துதல்
- இலங்கை பெருந்தோட்ட மக்களின் 200 வருட கால நிறைவினை நினைவுகூறும் தேசிய நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கும் அதேபோன்று இந்த மக்களின் மேம்பாட்டிற்கு எதிர்காலத்தில் மேலும் பல நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் அரசாங்கத்தினால் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கிணங்க, இலங்கை பிரசைகளான பெருந்தோட்டக் மக்களின் மேம்பாட்டின் பொருட்டு கல்வி மற்றும் சுகாதார வசதிகளை விருத்தி செய்வதற்கும் பொருளாதார மற்றும் தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதற்குமாக நிரந்தர வதிவுடன்கூடிய உயர் வாழ்க்கைத்தரத்தை பெற்றுக் கொடுப்பதற்கும் இயலுமாகும் வகையில் நீர்வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சு மற்றும் ஏனைய அரசாங்க நிறுவனங்கள் உட்பட அரச சார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து உரிய நிகழ்ச்சித்திட்டங்களை பயனுள்ள வகையிலும் வினைத்திறனுடனும் நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான வழிகாட்டல்களை செய்வதற்கும் மேற்பார்வை செய்வதற்குமாக மாண்புமிகு பிரதம அமைச்சரின் தலைமையிலான அமைச்சரவை உபகுழுவொன்றை நியமிக்கும் பொருட்டு மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.