• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-10-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
புதிய வேலைவாய்ப்புச் சட்டமொன்றை வரைதல்
- தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சரினால் தொழிற்சங்கங்கள், முதலாளிமார் மற்றும் உரிய தரப்பினர்களுடன் கலந்துரையாடி சமகாலத்துக்கு பொருத்தமான ஏற்பாடுகளுடன்கூடிய புதிய வேலைவாய்ப்புச் சட்டமொன்றை வரைவதற்காக தயாரிக்கப்பட்ட கருதுகோள் பத்திரமானது 2023‑08‑07 நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. இந்த கருதுகோள் பத்திரம் தொடர்பில் உரிய தரப்பினர்களுடன் மேலும் கலந்துரையாடி சிபாரிசுகளை சமர்ப்பிக்கும் பொருட்டு பிரதம அமைச்சரின் அலுவலகத்தில் இயங்கும் ஊழியர், சேவை கொள்வோர், அரசாங்கம் என்பவற்றை பிரதிநிதித்துவப்படுத்தும் முத்தரப்பு குழுவுக்கு தொடர்புபடுத்துவதற்கு இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அதற்கிணங்க, மாண்புமிகு பிரதம அமைச்சரின் தலைமையில் கூடியுள்ள இந்தக் குழு குறித்த கருதுகோள் பத்திரத்தை ஆராய்ந்து கவனம் செலுத்தவேண்டிய விடயங்கள் சம்பந்தமாக சிபாரிசுகளுடனான அறிக்கையொன்றை அமைச்சரவையின் கவனத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த இந்த சிபாரிசுகள் மற்றும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சரினால் இந்த விடயம் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட கருதுகோள் பத்திரம் என்பவற்றை அடிப்படையாக் கொண்டு, சட்டமூலமொன்றை வரையுமாறு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டது.