• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-10-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சமநலவெவ நீர்தேக்கத்தின் மீது மிதக்கும் சூரிய சக்தி PV முறைமை கொண்ட மின்நிலையமொன்றை நிர்மாணித்தல்
- மிதக்கும் மின் நிலையங்களை நிர்மாணிப்பன் மூலம் நீர்தேக்கங்களின் மீது சூரிய சக்தியினை பிறப்பித்தலானது மட்டுப்படுத்தப்பட்ட காணிகளைக் கொண்ட நாடுகளுக்கு மிக பொருத்தமான மாற்று வழியாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கிணங்க இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை மகாவலி அதிகார சபை என்பவற்றின் கீழுள்ள நீர்தேக்கங்களின் மேல் சூரிய வலுசக்தி பிறப்பாக்கல் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு சிறந்த வாய்ப்பு உள்ளதென இனங்காணப்பட்டுள்ளதோடு, இலங்கை மின்சார சபையின் கீழுள்ள சமநலவெவ நீர்தேக்கத்தில் அண்ணளவாக 100 ஹெக்டாயர் நீர் மீது சுமார் 150 - 200 மெகா வொட் மிதக்கும் சூரிய சக்தி PV முறைமை கொண்ட மின்நிலையமொன்றை நிர்மாணிப்பதற்காக பயன்படுத்தும் சாத்தியம் உள்ளதென உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கிணங்க, உட்கட்டமைப்பு வசதிகள் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது சம்பந்தமாக ஏற்புடையதாகும் தேசிய பெறுகை வழிகாட்டல்களைப் பின்பற்றி ஆர்வமுள்ள கருத்திட்ட பிரேரிப்பாளர்களிடமிருந்து உத்தேச சூரிய சக்தி மின்நிலையத்தை நிர்மாணித்து செயற்படுத்துவதற்கான பிரேரிப்புகளை கோருவதற்கு மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.