• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-10-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அற்றோனிதத்துவ கட்டளைச்சட்டத்திற்கான திருத்தம்
- அற்றோனிதத்துவகாரர்கள் காணி சம்பந்தமாக செய்யும் மோசடிகளை தவிர்க்கும் நோக்கில் 2022 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க சட்டத்தின் மூலம் அற்றோனிதத்துவ கட்டளைச்சட்டத்தை திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்க்பபட்டுள்ளது. இந்த திருத்தங்கள் அமுல்படுத்தப்பட்டதன் பின்னர், முக்கியமாக வௌிநாட்டு அற்றோனிதத்துவ, அற்றோனிதத்துவங்களை இரத்துச் செய்தல், இல்லாதொழித்தல் மற்றும் உரிய திருத்தங்களை அமுல்படுத்துவதற்கு முன்னர் தயாரிக்கப்பட்டிருந்த அற்றோனிதத்துவமொன்றை பதிவு செய்வதற்கு வழங்கப்பட்ட காலப்பகுதி போன்ற விடயங்கள் தொடர்பில் பல சட்ட உட்சிக்கல்கள் எழுந்துள்ளன. ஆதலால் மேலும் அற்றோனிதத்துவ கட்டளைச்சட்டத்தை திருத்தும் பொருட்டு சட்டமூலமொன்றை தயாரிப்பதற்கு 2023‑05‑08 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இந்த அங்கீகாரத்தின் பிரகாரம் சட்டவரைநரினால் தயாரிக்கப்பட்ட அற்றோனிதத்துவ (திருத்த) சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் உடன்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது. அதற்கிணங்க, உரிய சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர், அங்கீகாரத்தின் பொருட்டு பாரளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.